மொபைல்போன் விற்பனையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்து நோக்கியா வாகை சூடியுள்ளது.சிறந்த மொபைல் தயாரிப்பிற்கான நிறுவனங்களில் நோக்கியா முன்னிலை வகிக்கிறது. கடந்த ஆண்டில் 11 கோடியே 35 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து முதல் இடத்தை பிடித்து வெற்றி வாகை சூடி இருக்கிறது நோக்கியா.
வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக பிரசித்தி பெற்ற சாம்சங் நிறுவனம் மொபைல் தயாரிப்பாளர்களில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது. இந்நிறுவனம் 9 கோடியே 76 லட்சம் மொபைல்களை விற்பனை செய்து, 22.8% சதவிகிதத்தில் 2-ஆம் இடத்தை தக்க வைத்திருக்கிறது சாம்சங்.
ஐபோன்-4 எஸ் மூலம் சர்வதேச மொபைல் மார்கெட்டையே ஒரு கலக்கு கலக்கிய ஆப்பிள் நிறுவனம் 3-வது இடத்தை பிடித்து இருக்கிறது. போன முறை 5-வது இடத்தில் இருந்த ஆப்பிள் நிறுவனம் இந்த முறை மூன்றாவது இடத்திற்கு வந்திருப்பது மிக பெரிய முன்னேற்றம். ஆப்பிள் நிறுவனம் 3 கோடியே 7 லட்சத்தி 4 ஆயிரம் ஐபோன்களை கடந்த ஆண்டில், அதுவும் 3 மாதத்தில் விற்பனை செய்திருக்கிறது.
நன்றி :தட்ஸ் தமிழ்
3 கருத்துகள்:
super appu
super machi oru
qutar sollu
தகவலுக்கு நன்றி !
கருத்துரையிடுக