Blogger news

adharva school

சனி, 31 ஆகஸ்ட், 2013

தூங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய 8 உணவுகள்!!!

தூங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய 8 உணவுகள்!!!

இறைச்சி 
  • இறைச்சியில் எவ்வளவு தான் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருந்தாலும், அது செரிமானமாவதற்கு நிறைய நேரம் ஆகும். 
  • எனவே இறைச்சிகளை இரவு நேரத்தில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
 
சாக்லெட்
 
  •  இது  இடுப்புக்கு மிகவும் கெடுதலானது. 
  • அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள கலோரிகள் கொழுப்புக்களாக சேர்ந்து, தொப்பையை ஏற்படுத்திவிடும். 
  • எனவே சாக்லெட்டை இரவு நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் சாப்பிடுங்கள். மேலும் இதில் காப்ஃபைன் இருப்பதால், அது இரவில் உடலை புத்துணர்ச்சியடையச் செய்து, தூக்கத்தை கெடுத்துவிடும்.
  •  டார்க் சாக்லெட் மூளை மற்றும் ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்தது.

காய்கறிகள் 
 
  • வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். 
  • பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.
ஆல்கஹால் 
 
  • அனைவரும் ஆல்கஹால் நல்ல தூக்கத்தை தரும் என்று நினைக்கிறோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையில் அது தூக்கத்தை கெடுக்கும் ஒரு பொருள்.
  •  அதிலும் ஒயின் தான் தூக்கத்தைக் கெடுப்பதில் முதன்மையானது. மேலும் அதிக கலோரிகள் நிறைந்ததும் கூட.

சீஸ் பர்கர்
 
  •  மற்ற உணவுகளை விட, சீஸ் பர்கரில் தான் கலோரி அதிகமாக உள்ளது.
  •  மேலும் இதனை சாப்பிட்டால், இது வயிற்றில் ஒருவித அமிலத்தை உற்பத்தி செய்து, இரவில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

பிட்சா 
 
  • உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. 
  • மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடானது குறைந்துவிடுவதோடு, பாதிக்கப்படும். அத்தகைய உணவுப் பொருளை இரவில் சாப்பிட்டால், தூக்கம் கெடுவதோடு, நெஞ்செரிச்சலும் அதிகரிக்கும்.

பாஸ்தா 
 
  •  பாஸ்தாவில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
  • ஆனால் இந்த உணவுப் பொருளை இரவில் உண்டால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட், உடல் எடையை அதிகரித்துவிடும்.
  •  மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு கூட அதிக அளவில் உள்ளது. 
  • ஆகவே இந்த உணவுப் பொருளை அறவே தவிர்க்க வேண்டும்
இனிப்புப் பொருட்கள் 


 
  • சிலருக்கு இரவில் இனிப்புப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். 
  • ஆனால் அதிக கலோரி உணவுகள் மற்றும் இனிப்புப் பொருட்களை சாப்பிட்டால், அவை மூளை அலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும். 
 
எனவே நல்ல அமைதியான மற்றும் ரிலாக்ஸான தூக்கத்தைப் பெற வேண்டுமெனில், இனிப்புப் பொருட்கள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, ஓட்ஸ் போன்ற கலோரி குறைவான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

குட்டிக்கதை:

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி.
ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்,"முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.
இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம்,
"முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து,
"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!!!!!!!

புதன், 28 ஆகஸ்ட், 2013

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  தைரியமாக  சாப்பிடக்கூடிய பழங்கள்:
 
ஒரு ஆய்வு சொல்கிறது
நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். 
 நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் , அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது ஒரு ஆய்வு
இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
 
பேரிக்காய்
 பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கொய்யா 
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
 
ஆப்பிள்
ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி 
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
 
 
பப்பாளி 
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
 
 
மாதுளை 
மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.


நெல்லிக்காய் 
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.


 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி :

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார், அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர், மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு, அவரிடம் என்னவென்று வினவினார்.


அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான்..

அவனின் வலியறிந்த காமராஜர் சட்டமன்றத்தில் நுழைந்ததும் கூறியது, "ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார், பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது, பொத்தானை அழுத்தினால் கீழே வருகிறது, இதற்க்கு எதுக்கு பத்தாவது படிக்க வேண்டும், அவனாவது எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான், ஆனால் நான் அது கூட படிக்கவில்லையே, அப்படி என்றால் எனக்கு மின் தூக்கியை துடைக்கும் வேலை கூட கிடைக்காதே.." என்றராராம். அரசானை பிறப்பித்தவர் வாயடைத்து நின்றராராம்..

:: "தன்னை இகழ்ந்து, பிறரை உயர்த்திக்காட்டுகிறவனே உயர்ந்து நிற்கிறான் 


நன்றி:

முகப்புத்தகம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-3

உங்க புத்தக அலமாரி இப்படி இருந்த எப்படி இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள் interior decoration part-3

 






 

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

உண்மையான தேனை சுலபமான முறையில் கண்டு பிடிக்கலாம்

உண்மையான தேனை சுலபமான முறையில் கண்டு பிடிக்கலாம்
எத்தனை காலமானாலும் கெட்டு போகாத ஒரே பொருள் "தேன்"....தேன் என்று சொல்லி சர்க்கரைப் பாகுவை விற்று விடுவோரும் உண்டு. தேன் வாங்கும்போது உண்மையான தேன்தானா..???? என்பதை அறிவது எப்படி..?

அதற்கு இதோ இரண்டு வழிகள்..
1) ஒரு காகிதத்தில் ஒரு துளி தேனை வைத்தால்
அது காகிதத்தால் உறிஞ்சப்படாமல்.பரவாமல் அப்படியே நிற்கும் .

2) ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு துளி தேனையிட்டால்
அது நீரோடு கரையாமல், நேராக கீழே சென்று அமரும்.
 நாம் பயன்படுத்தும் தேன் உண்மையானதா?வாருங்கள் சோதித்துப் பார்க்கலாம்..
 

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ஏர்டெல் மெசேஜ் கார்டு போடும்போது கவனமாக இருக்கவும்



ஏர்டெல் மெசேஜ் கார்டு போட்டேன் இன்றைக்கு ஆனா 36 ரூபாய்க்கு போட்டாலும் தினமும் 50 பைசா எடுத்து கொள்வார்களாம் ஆனா ரொம்ப அந்நியாயம் செய்கிறது ஏர்டெல் நிறுவனம் மத்த நெட்வொர்கெ பரவா இல்லை நண்பர்களே அதே போல் 28 நாட்கள் மட்டுமே முன்பு 36 ரூபாய் மட்டுமே 30 நாட்கள் இருந்தது  இப்போது 36 ரூபாய் மற்றும் தினமும் 50 பைசா அதுவும் 28 நாட்கள் மட்டுமே. நண்பர்களே ஏர்டெல் நெட்வொர்கில் மெசேஜ் கார்டு போடும் போது கவனமாக இருக்கவும்
அதுவும் எந்த முன் அறிவுப்பும் இன்றி இந்த பிளான் மாற்றி விட்டார்கள்

புதன், 21 ஆகஸ்ட், 2013

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்: ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும்! ! ! !

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்: let's try
வரக்கொத்தமல்லி --அரை கிலோ
வெந்தயம் ---கால் கிலோ
தனித்தனியா மேற்கண்டவற்றை பொன்னிறமாக வறுத்து தனித்தையாக பொடி செய்து இரண்டையும் நன்கு கலக்கவும்.

(வரக்கொத்தமால்லி என்பது மளிகைக்கடையில் மிளகாய் மல்லி என்று கேட்டு வாங்குவதில் உள்ள கொத்தமல்லியே. இது புரிந்துகொள்வதற்காக).

கலந்த பொடியில் இரண்டு டீஸ்பூன் பொடியை இரண்டு டம்ளர் (இருநூறு மில்லி ) குடிநீரில் கொதிக்க வைத்து ஒரு தம்லராக சுண்டக் காய்ச்சவும். பின்பு வடிகட்டி மூன்று வேலைகளுக்கு சாப்பாட்டிற்கு முக்கால் மணி முன்பாக சப்ப்பிட்டு வரவும்.

இதைச் செய்தவுடன் குறைந்தது முக்கால் மணி நேரம் வேறு எதையும்(குடிநீர் தவிர) உண்ணக்கூடாது.

ஒரு மாதத்தில் சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும். சர்க்கரை உங்கள் ரத்தத்தில் உள்ள அளவை ஒரு வார இடைவெளியில் இம்மருந்து சாப்பிடும் முன்பாகவும் பின்பாகவும் பரிசோதனைக்கூட சோதனையில் உறுதி செய்யுங்களேன்.

செவ்வாய், 20 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-2

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-2

உங்க புத்தக அலமாரி இப்படி இருந்த எப்படி இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள் interior decoration part-2






திங்கள், 19 ஆகஸ்ட், 2013

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடுவது எப்படி?

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு 60 சதவீத மதிப்பெண் (150–க்கு 90 மதிப்பெண்) எடுக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்நியமனத்தைப் பொருத்தவரையில்,ஆசிரியர் நியமனம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு வழக்கில் தீர்ப்புவரும்வரை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் மாநில அளவிலான பதிவுமூப்பு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு,தகுதி தேர்வு மதிப்பெண்,பிளஸ்–2 மதிப்பெண்,பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் நியமனம் நடைபெறும். தகுதித்தேர்வுக்கு 60 மதிப்பெண்ணும்,பிளஸ்–2 தேர்வுக்கு 15 மதிப்பெண்ணும்,பட்டப் படிப்புக்கு 15 மதிப்பெண்ணும்,பி.எட். படிப்புக்கு 15 மதிப்பெண்ணும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 100 மதிப்பெண். தகுதித்தேர்வில் ஒருவர் எடுக்கும் மதிப்பெண் 60–க்கு மாற்றப்படும். பிளஸ்–2,டிகிரி,பி.எட். தேர்வில் மதிப்பெண் ஒதுக்கீடு விவரம்பின்வருமாறு:–
12–ம் வகுப்பு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால்–10 (அதிகபட்ச முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–8 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–6 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–5 மதிப்பெண்
50 சதவீதம் முதல் 60 சதவீதத்திற்குள்–2 மதிப்பெண்
பட்டப் படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்
50 சதவீதத்திற்கு கீழ்–10 மதிப்பெண்
பி.எட். படிப்பு
70 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–15 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
50 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–12 மதிப்பெண்
தகுதித்தேர்வு
90 சதவீதம் மற்றும் அதற்கு மேல்–60 மதிப்பெண் (முழு மதிப்பெண்)
80 சதவீதம் முதல் 90 சதவீதத்திற்குள்–54 மதிப்பெண்
70 சதவீதம் முதல் 80 சதவீதத்திற்குள்–48 மதிப்பெண்
60 சதவீதம் முதல் 70 சதவீதத்திற்குள்–42 மதிப்பெண்

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-1

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration பார்ட் 1:

இப்படி எல்லாம் புத்தக அலமாரி இருக்குமா என்று கேட்கும் அளவிற்கு அட்டகாசமான புத்தக அலமாரிகள் இதோ உங்களுக்காக நண்பர்களே






வியாழன், 15 ஆகஸ்ட், 2013

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2013

எது சிறந்த பேஸ்ட் கோல்கட் அல்லது பெப்சொடேன்ட்?

எது சிறந்த பேஸ்ட் கோல்கட் அல்லது பெப்சொடேன்ட் 


இப்போது  சர்ச்சையைத் துண்டும் வகையில் பெப்சொடேன்ட் நிறுவனம் நேரடியாக ஒரு விளம்பரத்தை வெளியிட்டு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது
இதற்கு முன்பு ரின் டைடை விட சிறந்தது என்று ஒரு சர்ச்சை வந்தது அதே போல் இப்போதும் இந்த சர்ச்சை
அதன் காணொளி கீழே