Blogger news

adharva school

ஞாயிறு, 6 ஜூலை, 2014

நான் பாத்த இரண்டு படம்

இன்றைக்கு இரண்டு படம் பாத்தேன் ஒன்னு முண்டாசு பட்டி மற்றொரு படம் ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்



முண்டாசு பட்டி நல்ல காமெடி படம் கொஞ்சம் கூட போர் அடிகல, 80's படம் மாறி  பீல். படம் சூப்பர்.  ஆர்ட் diretion நல்ல பண்ணி இருக்கார் அப்புறம் ஒளிப்பதிவு அருமை இசை மற்றும் பின்னணி இசையும் நல்ல இருக்கு ஹீரோ விஸ்ணு அவர் ப்ரண்ட் நல்லாவே காமெடி பணிருகாங்க
அதுலயும் அந்த முனீஷ்காந்த் செம சூப்பர்

 நெறைய இடத்துல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார் அவர் ஹேர் ஸ்டைல் மேனரிசம் எல்லாமே அருமை முக்கியமா அவர் வாய்ஸ். ரொம்ப நாளைக்கு அப்பறம் அருமையான காமெடி படம் பார்த்த திருப்தி இருந்தது
அடுத்தது ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்படம் ரொம்பவே நீளம் நல்ல பிரமாண்டம் 3டி ல சூப்பர் ஆனா முதல் 3 பார்ட் மாறி இல்லன்னு சொல்லாம் அடுத்தது என்ன நடக்கும்னு ஈஸியா guess பண்ணமுடியும் ஆனால் பழைய படங்கள பாக்கமா இந்த படத்த பாத்தா ரொம்ப புடிக்கும்
முண்டசுபட்டி 4.5/5
ட்ரான்ஸ் பார்மர்ஸ் ஏஜ் ஒப் எச்டின்க்சன்  3.5/5

 

வியாழன், 3 ஜூலை, 2014

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம்

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம் :

இன்றைக்கு ஈரோடு  டு அந்தியூர் பேருந்தில் சென்றபோது  பவானி பேருந்து நிலையத்தில் பேருந்து சிறிது நேரம் நின்றது அப்போது வெளியே ஒரு இளம் பெண் ஒரு இரண்டு வயது குழந்தையை வைத்து வித்தை காட்டி கொண்டு இருந்தார் முடிந்ததும் அக்குழந்தை ஒரு கிண்ணத்துடன் பேருந்தில் ஏறி அனைவரிடமும் காசு கேட்டது அப்போது ஒரு இசுலாமிய பெண்மணி அக்குழந்தையை மடியில் உக்கார வைத்து "நான் உனக்கு சாப்பாடு நல்ல துணிமணி பள்ளிகுடம் எல்லாம் சேத்தி விடறேன் என்குட வந்தரய "என கேட்டார் அதற்கு அக்குழந்தை மாட்டேன் என்பது போல் தலை ஆட்டியது அப்பெண்மணி அந்த குழந்தைக்கு பத்து ரூபாயை கொடுத்தார் அதேபோல் அவர் உறவினரிடமும் கொடுக்க சொல்ல அவரும் கொடுத்தார் எல்லாரும் கொடுத்தனர் அக்குழந்தை இறங்கியதும் அப்பெண்மணி கூறினார் " இந்த குழந்தைட்ட இருந்து காசு மட்டும் வாங்கிட்டு ஒரு பால்கூட வாங்கி தரமாட்டாங்க .ஆண்டவன் கொழந்த இல்லாதவங்களுக்கு கொளந்தைய குடுக்கறது இல்ல ஆனா இவங்களுக்கு கொளந்தைய குடுத்து குழந்தையை கஷ்ட படுத்தறான் " என்று கூறினார்
இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக அமைந்தது. மனிதாபிமானம் இன்னும் வளர்ந்து கொண்டு உள்ளது இந்த பெண்மணி போல் உள்ளவர்களினால் .....